தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக 3ம் அலை பரவத் தொடங்கியது. தற்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்ப்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது பல்வேறு நாடுகளிலும் மற்றும் அண்டை மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62,000/- ஊதியத்தில் அரசு வேலை !
இந்த நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது ஒமைக்ரான் தொற்றை விட வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்கா, தீவு நாடான சமோவா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அதன்படி கொரோனாவின் 4ம் அலை பரவத் தொடங்கியதை உணர முடிகிறது.
மீண்டும் ஏமாற்றும் கோபி, எச்சரித்த எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!
இதே போல் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.