தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – தலைமை செயலர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் தொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
தலைமை செயலாளர் உத்தரவு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்தார். அதன் பின்னர் பல்வேறு அரசு துறைகளிலும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – முதல்வர் விளக்கம்!
அதில் தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் பல நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் தூசி படிந்த பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வாகனங்கள் பற்றி போதிய விவரங்கள் இல்லை. இந்த வாகனங்களை யார் நிறுத்தியது என்பது குறித்தும் தெரியவில்லை. இதனால் இந்த வாகனங்களை அப்புறப்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை அந்தந்த அலுவக துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும்.
இந்த வானங்களை ஏலம் விடுப்பது மூலமாக பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் நிறுத்த அதிகமாக இடம் கிடைக்கும், மேலும் அரசு கருவூலத்திற்கு சிறிய அளவிலான நிதியும் சேரும். கொளுத்தும் வெயிலிலும், கடும் மழையிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த வாகனங்கள் சேதாரம் அடைகின்றன. அதனால் ஏலம் விடும் போது சரியான விலைக்கு போவதில்லை. இதனால் பழைய பயன்பாடற்ற வாகனங்களுக்கு உரிய விலைகளை நிர்ணயம் செய்து விரைவாக ஏலம் நடத்த வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்த நடவடிக்கைகளை விரைவாக செய்து இது குறித்த அறிக்கையை மோட்டார் வாகனங்களின் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அதேசமயம் அமலாக்கத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய முறையில் பைசல் செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.