தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு - மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு - மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் இன்று வெளியிட்டார். மேலும் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

உடனடிதேர்வு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் இறுதி வரை நடைபெற்றது. மேலும் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார். இதன் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76 % மாணவ , மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் www.tnresults.nic.in,www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழக 10ம் வகுப்பு முடிவுகள் எப்போது வெளியீடு? முக்கிய தகவல்!

மேலும் 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர், இருப்பினும் பொதுத்தேர்வில், 6,79,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1.95 லட்சம் மாணவர்களும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5.28 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2.25 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடி தேர்வு நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி, 12ம் வகுப்புக்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும் மற்றும் 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!