மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு – இயக்குனர் தகவல்!
சென்னையில் மீனம்பாக்கம் முதல் கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு குறித்து திட்ட அறிக்கை முடிவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
மெட்ரோ ரயில்:
இந்தியா தொழில்நுட்பத்தில் எத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது என்று வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதாவது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்தியாவில் தரை முதல் விண்வெளி வரை பல வியக்கத்தக்க பரிணாம வளர்ச்சியினை நம் நாடு அடைந்து வருகின்றது. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் நெரிசல் பாதியாக குறைந்துள்ளது. மேலும் சுற்றுசூழல் பாதிப்பும் குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் ஒரே நேரத்தில் முன்னூறு முதல் நானூறு பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். தமிழகத்தின் தலைநகரமாக திகழும் சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் மாவட்டமாகும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் – செப்டம்பர் 15 முதல் துவக்கம்
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்வதால் போக்குவரத்தும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு போகிறது. இதனால் சுற்றுச்சூழல் மிக மோசமான நிலையினை அடைந்து விடும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு சமாளிக்கும் படி உள்ளது. மேலும் மீனம்பாக்கம் முதல் கிளம்பாக்கம் வரையில் மெட்ரோ விரிவாக்கம் செய்வது குறித்து திட்ட அறிக்கை முடிவடைந்துள்ளதாக மெட்ரோ திட்ட இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
When will the metro from Kalambakkam to Orgadam come? Kilambamkam to Orgadam