TCS, HCL & Infosys நிறுவனங்களில் “Work From Home” தொடருமா? முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தினர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிக்கு அழைக்கின்றனர். இதையடுத்து நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பை பற்றி பார்ப்போம்.
ஊழியர்கள் கவனத்திற்கு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் தனியார் நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியலாம் என்று அறிவுறுத்தினர். அத்துடன் அவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு பணிபுரிய இன்டர்நெட், கணினி உள்ளிட்ட தேவைகளையும் நிறுவனங்களே பூர்த்தி செய்தனர். அதன்படி கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு பணி செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு பணி செய்யவே விரும்புகின்றனர். ஏனெனில் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணி செய்யும் போது பர்சனல் லைப் மற்றும் அலுவலக பணியினையும் ஒரே நேரத்தில் சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது. அதனால் ஊழியர்கள் இந்த ஹைபிரிட் பணி மாடலை விரும்புவதாக ஓர் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மீண்டும் வீரியமாக பரவும் கொரோனா? மருத்துவர்களின் கருத்து இது தான்!
இதில் குறிப்பாக TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவனங்கள் WORK FROM HOME நடைமுறையே பின்பற்றி வருகின்றனர். ஆனால் சில நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் TCS, Infosys நிறுவனங்கள் 3 கட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது நிறுவனத்திற்கு அருகில் இருக்கும் ஊழியர்களை வாரத்திற்கு இரண்டு முறை அலுவலகத்திற்கு வர வேண்டும். அடுத்ததாக ஊழியர்களை மேம்பாட்டு மையங்களுக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து HCL நிறுவனம் ஹைபிரிட் பணி மாடலை பின்பற்றி வருகிறது. அத்துடன் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது.