TNUSRB உதவி ஆய்வாளர் (SI) காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை தேர்வு!
தமிழகத்தில் நாளை காவல்துறையில் உள்ள SI பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் ஒன்று போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலம் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி நாளை SI பணியிடத்திற்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தேர்வு பணியில் ஈடுபடும் காவலர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் குறித்த கூட்டம் ஒன்று போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இவர் கூறியிருப்பதாவது, தேர்வில் கலந்து கொள்ள தேர்வர்கள் தேர்வுக்கூட மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும். அத்துடன் தேர்வு 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். அதன்பிறகு வருகை தரும் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேர்வர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா உள்ளிட்ட பொருட்களை மட்டுமே கொண்டு வர வேண்டும். மற்ற பொருட்கள் ஏதேனும் இருந்தால் அவை தேர்வுக்கூட மையத்தின் நுழைவு வாயிலேயே நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியுள்ளார்.