TNPSC CESE தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – பொதுப்பணி தேர்வாணையம் வெளியீடு!
TNPSC மூலமாக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2022ஆம் ஆண்டில் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
TNPSC தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஒவ்வொரு தேர்வுகளாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பொறியியல் சார்ந்த பணிகளுக்கான சி.இ.எஸ்.இ. தேர்வை நடத்துகிறது. நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல துறைகளில் பொறியியல் பணிகளுக்கான இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்பதில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான நேரடி பணி நியமனம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!
விருப்பமுள்ளவர்கள் மே 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டின்பிஎஸ்சி சிஇஎஸ்இ எழுதுத்துத் தேர்வு ஜூன் 26ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையில் முதல் பேப்பர் தேர்வும், பிற்பகல் 2.00 மணி முதல் 5 மணி வரையில் இரண்டாம் கட்டத் தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேர்வர்களிடம் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். தேர்வர்கள் கட்டணம் செலுத்தி ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் மூலமாக அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செல்லுபடியாகும்.