TNPSC 5529 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – குரூப் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்!

0
TNPSC 5529 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - குரூப் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்!
TNPSC 5529 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - குரூப் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்!
TNPSC 5529 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – குரூப் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் சுமார் 4012 மையங்களில் இன்று (மே 21) TNPSC குரூப் 2 மற்றும் 2A போட்டித் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குரூப் 2 தேர்வு

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று குரூப் 2 தேர்வுகளை நடத்த இருக்கிறது. அந்த வகையில் அரசுப் பணியிடங்களில் ஏற்பட்டுள்ள சுமார் 5,529 காலியிடங்கள் குரூப் 2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்போது இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று (மே.21) நடைபெற இருக்கிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் சுமார் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

TN Job “FB  Group” Join Now

இப்போது தேர்வுகளை எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வு முடிந்த பிறகு தேர்வர்கள் அனைவரும் மதியம் 12.45 மணி வரை தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது தேர்வுப்பணிகளில் 4012 தலைமை கண்காணிப்பாளர், 58,900 கண்காணிப்பாளர்கள், 323 பறக்கும் படையினர், 993 மொபைல் குழு, 6,400 பரிசோதனை குழு என 71 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் கொட்டப்போகும் பண மழை!

இது தவிர தேர்வுக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் மையங்களில் இருக்கும் வகையில் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய TNPSC தலைவர் பாலச்சந்திரன், ‘குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. தேர்வர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுபவர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும். இந்த குரூப் 2 தேர்வுக்கான முடிவு ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!