TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!

0
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் சுமார் 13,331க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் சுமார் 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பணியிடங்கள் அனைத்தும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக நிரப்பப்படும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் இந்த ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளிக்கல்வித்துறை மூலமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அல்லது பதவி உயர்வு மூலம் அந்த பணியில் தொடர விரும்பும் ஆசிரியர்கள் இருந்தால் இப்போது தற்காலிகமாக பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்காலிகமாக பதவியில் ஏற்படுத்தப்படும் இடைநிலை ஆசிரியர்கள் மாதம் ரூ.7,500 சம்பளமாக பெறுவார்கள்.

கோபி போனை பார்த்து சந்தேகப்பட்ட பாக்கியா, துபாய் போக முடிவு செய்யும் ராதிகா – இன்றைய எபிசோட்!

தவிர பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தயார் செய்வதற்கும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!