TN TRB 1400 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விடுதிகளில் உள்ள 400 வார்டன் மற்றும் 1000 சமையலர் பணியிடங்கள் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அரசு பணியிடங்கள்:
தமிழகத்தில் புதிய அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் அனைத்து துறைகளிலும் பல நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பாராத விதமாக கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக அரசு பணிக்கான குரூப் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.
ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – ஜூலை 1 இல் புதிய கல்வியாண்டு தொடக்கம்!
இதனால் அரசின் அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கத் தொடங்கியது, மேலும், புதிய பணிகளுக்கான ஊழியர்களும் அதிக அளவில் பற்றாக்குறையாக இருந்தனர். இதனால் விரைவில் அரசு பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அவை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு முன்னதாக வாக்குறுதி அளித்து இருந்தது. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கான கோரிக்கைகளும் அதிக அளவில் எழுந்து வந்தது.
தற்போது தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் 400 வார்டன் பணியிடம் நிரப்படும் என்றும் 1000 சமையலர் பணியிடமும் நிரப்பப்பட்டு விடுதிகளில் ஒரு மாதத்தில் குறைகள் சரிசெய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் 1400 பேர் அரசு வேலைவாய்ப்பினை பெற உள்ளார்கள்.