TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – விரைவில் தேர்வினை நடத்த திட்டம்?
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. இதுவரைக்கும் 6.3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவுள்ளதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இறுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளாகவே தேர்வு நடத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெட் தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மார்ச் 7ஆம் தேதி தான் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்காக ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருப்பதால் லட்சக்கணக்கானோர் இந்த தகுதி தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 6.3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களாக நடைபெறும். அதாவது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளை எழுதலாம் மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாவது தாளை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து கல்வித்துறை உத்தரவு!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியும் தற்போது வரைக்கும் எந்த தேதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகவே இல்லை. கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்துவார்கள் என எதிர்பார்த்த நேரத்தில் இன்னும் அதற்குரிய அறிவிப்பு வெளியாகாமலே உள்ளது. கூடிய விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.