சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய அறிவிப்பு!!
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு 10, 11 ஆம் வகுப்பு தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ மதிப்பெண்:
நாட்டில் கொரோனா நோய் பரவல் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு வரவேற்புகளை பெற்று வந்தது.
TN Job “FB Group” Join Now
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. தற்போது அதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டாம் – DEO சுற்றறிக்கை!
அதன்படி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிப்பெண் முறையை அளவீடு செய்ய 13 பேர் கொண்ட குழு ஆலோசனை மேற்கொண்டு, 3 மதிப்பெண்களையும் சேர்த்து வெயிட்டேஜ் முறை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை செய்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.