ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு – E-Shram போர்ட்டலுடன் இணைப்பு!
இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை E-Shram போர்ட்டலுடன் இணைக்க உள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
E-Shram போர்டல்:
இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். அதாவது கார்டுதாரர்கள் தங்களின் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்றாலும் அல்லது வெளி மாநிலத்திற்கு சென்றாலும் தங்களின் கைரேகை பதிவை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற முடியும்.
Exams Daily Mobile App Download
இத்திட்டம் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக இவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ரேஷன் பொருட்களை பெற முடியும். மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த E-Shram போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலில் தங்களின் விவரங்களை விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் விபத்து காப்பீடு உள்ளிட்டவை பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
TNPSC Group 2 & 2A தேர்வர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – தவறாமல் படிங்க!
இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் E-Shram வாக்குறுதி குறித்து IE THINC மைக்ரேஷன் வெபினார் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியதாவது பொது விநியோக கடைகளில் இருந்து மாதாந்திர உணவு தானிய சேகரிப்பின் இருப்பிடத் தரவுகளின் அடிப்படையில், ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டுடன் E-Shram போரட்டலை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இதிலுள்ள நிரந்தர இருப்பிட தரவுகளுடன் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுலபமாக அடையாளம் காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.