1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரியில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. இதை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு எப்போது நடத்தப்படும் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்து தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கடந்த 2020 மார்ச் முதலே மூடப்பட்டன, அதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஆன்லைன் கல்வியால் கற்றல் பாகுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பள்ளிகளை விரைவாக மீண்டும் திறக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் மூலம் வைரஸ் பாதிப்பு வேகமாகக் கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால், கடந்த செப். மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டன. முதலில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் சில வாரங்களில் இதர மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் ஆண்டு தேர்வு நடத்தாமலே, ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் புதுச்சேரியில் அடுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டமும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2ம் வரை மாநில பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் கோடை வெயில் தொடங்குவதற்குள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்தன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உடன் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு? சம்பளம் விவரம் இதோ!

இந்த கோரிக்கையை ஏற்று 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வை வரும் 25 ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடத்திட முடிவு செய்து, தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பள்ளி அளவில் தயாரித்துக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி அளவில் விடைத்தாள்களை திருத்தி, தேர்ச்சி பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 9:30 மணியில் இருந்து 11:30 மணி வரையிலும், 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!