தமிழக ஓய்வுதாரர்கள் கவனத்திற்கு – சம்பள உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு!

0
தமிழக ஓய்வுதாரர்கள் கவனத்திற்கு - சம்பள உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு!
தமிழக ஓய்வுதாரர்கள் கவனத்திற்கு - சம்பள உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு!
தமிழக ஓய்வுதாரர்கள் கவனத்திற்கு – சம்பள உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு!

தமிழகத்திலுள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு சமீபத்தில் தான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

கடந்த சில மாதங்களாகவே மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு போன்ற சில கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன்புதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34 சதவீதமாக உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல பல மாதங்களாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்காமல் கூட்டுறவுத்துறை அமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு – பணம் வசூல்! பெற்றோர்கள் அதிருப்தி!

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டுமென தலைமைச்செயலாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பணிபுரிந்து வரும் அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் எனவும், ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படியை நடைமுறைக்கு வரும் விதமாக அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கினால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!