TNPSC சற்றுமுன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TNPSC சற்றுமுன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC சற்றுமுன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC சற்றுமுன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு தேர்வாணையம் முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

TNPSC:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC போட்டித் தேர்வுகள் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருடங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான தேர்வு கால திட்டத்தினை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் விவரங்கள் தனியாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – 174 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதனை தொடர்ந்து தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும். முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வு கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தீவிர ஆலோசனை!

எந்த ஒரு தேர்வரும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்குப் பின்னர் தேர்வு கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வு கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்து கொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, விரைவுத்தகவல் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் உடமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!