ஐடி நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு!
உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்குமோ என அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதாக ஆய்வின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனம்
கடந்த 2008 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி காரணமாக ஐடி பங்கு சந்தைகள் மிகவும் சரிவடைந்து கொண்டிருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் பண வீக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக ஐடி நிறுவன ஊழியர்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். ரெசிஷன் பயத்தால் ஐடி மற்றும் ஐடி டெக் பங்குகள் அனைத்தும் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வருவதால் பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
உலகளவில் உள்ள அனைத்து நாட்டு ஐடி நிறுவனங்களும் ஐடி சேவைகளுக்காக அதிகளவில் செலவு செய்து வருகிறது. இந்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் மந்தமான மற்றும் அதிகப்படியான மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. அனைத்து உலக நாடுகளிலும் உருவாக இருக்கும் ரெசிஷன் மூலமாக ஐடி நிறுவனங்கள் அல்லது நிதியியல் சேவை துறைகள் பாதிப்படைய போவதில்லை. சப்ளை செயின் மற்றும் ரீடைல் துறை தான் ரெசிஷன் மூலமாக அதிகளவில் பாதிப்படைய போகிறது.
தமிழக ஓய்வுதாரர்கள் கவனத்திற்கு – சம்பள உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு!
மேலும், நிதியியல் துறை தான் ஐடி நிறுவனங்களுக்கு மற்றும் டிஜிட்டல் சேவைக்கு அதிகமான முதலீட்டை வழங்கி வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான வாடிக்கையாளர்களை நிதித்துறையில் இருந்து தான் வைத்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சந்தை ஆய்வுகளின் படி ஐடி நிறுவனங்களுக்கு பெரிதாக எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும், குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.