தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – முழு விபரம் இதோ!
கொரோனா காலகட்டத்தில் செலவழித்த செலவுகளை கருத்தில் கொண்டு அரசு நிகழ்வுகளுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கும் படி தமிழக அரசு உத்தரவு விடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த விவரங்களை காண விரும்பினால் இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.
நிதி நெருக்கடி
நிதி நெருக்கடி குறித்து தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் செலவழிக்கபட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, அரசுக்கு ஏற்படும் மற்ற செலவீனங்களை குறைப்பதற்காக, தமிழக அரசு தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதன்படி உத்தரவுகளை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி வாரியங்கள் ஆகியவை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
அதன்படி, ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்பு வண்டிகள் ஆகியவற்றுக்கான வாகனங்களை வாங்குவது மற்றும் புதிய வாகனங்களை வாங்க நிர்வகிக்கப்பட்ட தடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பழைய பழுதடைந்த வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை பயிற்சி, கொரோனா தொடர்பான பயிற்சி தவிர மற்ற அனைத்து பயிற்சிகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. பழுதடைந்த கம்ப்யூட்டர்களை மாற்றுவதற்கும் மட்டும் புதிய கம்ப்யூட்டர்களை வாங்க வேண்டும் என்றும் தேவை இல்லாமல் புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கக் கூடாது என்ற அனுமதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளனர்.
ஜூலை 1 முதல் Hero நிறுவன இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
மேலும் ஒரு சில துறைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை நீக்கப்படாமல் இருக்கின்றன. அந்த வகையில், அரசின் தேவைகளுக்கு மட்டுமே அதிகாரிகள் பிரயாணம் செய்யலாம் என்றும் ஆய்வுக் கூட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட மையத்தில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும். அரசு ஊழியர்கள் மாநிலத்தை விட்டு வெளியே செல்பவர்கள் விமானப் பயணங்களை தவிர்க்கும் படி விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, கருத்தரங்குகள், மாநாடுகள், கலாசார நிகழ்ச்சிகளுக்கு அமல்படுத்தப்பட்ட தடை உத்தரவு விளக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எந்த ஒரு நிகழ்ச்சிகள் என்றாலும் ஆன்லைன் மூலம் நடத்துவதே சிறந்ததாகும் என தெரிவித்துள்ளனர்.