தமிழக அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் உழவாரப் பணிகளை மேற்கொள்வதற்காக தன்னார்வலர் மற்றும் குழுக்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதற்கான முன்பதிவு இணையதளம் செயல்பட துவங்கியுள்ளது.
கோவில் பணி
இந்து அறநிலையத் துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு கோவில்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கோவில்களின் நிர்வாக பணிகள், செயல்முறைகளை கண்காணிக்கும் மற்றும் மேற்பார்வை செய்யும் பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோவில்களில் ஆண்டுதோறும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.
6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் இந்த ஆண்டும் இப்பணிகளை மேற்கொள்வதற்காக தன்னார்வ குழுக்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த பணியை செய்ய விரும்பும் நபர்கள் அல்லது குழுக்கள் புதிதாக துவங்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் திருக்கோவில்களில் உழவாரப்பணி செய்ய விரும்புபவர்கள் அவர்கள் பணியை மேற்கொள்ளும் நேரம், தேதி மற்றும் பணி உள்ளிட்ட விவரங்களை தேர்வு செய்து அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர முன்பதிவு செய்த உரிய அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விருப்பமுள்ள ஒவ்வொருவரும் https://hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பார்வையிட வேண்டும் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.