TNPSC 7ம் வகுப்பு முடித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை!
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லூரியில் ஜனவரி 2023 பருவத்தில் 8ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால்குமாவத் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கல்லூரியில் சேர மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் அனைத்து துறைகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதன் அடிப்படையில் TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடுனில் உள்ள இராஷட்ரிய இந்தியராணுவக் கல்லூரியில் 2023 ஜனவரி பருவத்தில் சேருவதற்கான 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதியில் நடத்தப்பெறும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1.1.2023 அன்று 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – எப்போது கிடைக்கும்? முழு விவரம் இதோ!
மேலும் வயது வரம்பில் தளர்வு கிடையாது. அதாவது அவர்கள் 2.1.2010க்கு முன்னதாகவும் 1.7.2011 க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 1.1.2023ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 4 அன்று நடைபெற உள்ளது. விண்ணப்படிவம் மற்றும் தகவல்கள் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளவும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவம் தகவல் தொகுப்பேடு கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லூரி டேராடூன், உத்ரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண்:248003Õ என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பிக்கலாம்.
JIPMER பல்கலைக்கழகத்தில் B.Sc படித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு !
இதையடுத்து கமான்டன்ட, ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லூரி டேராடூன் அவர்களுக்கு உத்ரகான்ட் டேராடூன், டெல்பவன் ஸ்டேட் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு 01576) செலுத்தத்தக்க பொதுப்பிரிவினர் ரூ.600க்கான மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555 க்கான கேட்பு வரை வோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள் (இரட்டை பிரதிகளில்) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர் சென்னை 600 003 என்ற முகவரிக்கு 25.4.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரம் அறிய முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், இராமநாதபுரம் அலுவலக நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (04567 230045) தொடர்பு கொள்ளலாம்.