தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் சோர்வடையாத வண்ணம் இருக்க தேவையான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன் பேரில் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக வீட்டில் இருந்து விட்டு வெகு நாட்களுக்கு மீண்டும் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் மன சோர்வை போக்கும் வகையில் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அரசின் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இதுபற்றி விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தொடக்க நிலை மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்ப்படுத்த எழுத்து, கதை கூறுதல், ஓவியம் வரைதல், ஆகியவற்றை செய்ய சொல்லி அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். மேலும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அடுத்த வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு நடனம், பாடல், மற்றும் விளையாட்டு போன்று ஊக்கம் அளித்து அதன் பின்னர் கல்வியை கற்பிக்க முடிவு செய்துள்ளோம் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பெற்றோர்கள் அனுமதி கடிதம் எழுதி அதில் பெற்றோர், பாதுகாவலர், கையொப்பம் பெற்று வர வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.