தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவு!
ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் சரி வர நடைபெறவில்லை என புகார்கள் எழுந்து வந்த நிலையில் ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. எனவே தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீட்சா சாப்பிட மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் – பிரபல நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!
தற்போது தமிழகத்தில் சென்னை-வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி ரேஷன் ஊழியர்கள் முதல் வாரத்தில் வருபவர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
மற்ற வாரங்களில் வருபவர்களுக்கு ஏதேனும் பொருட்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்புவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குகிறது. எனவே கடைக்கு வரும் கார்டுதாரர்கள் அலைக்கழிக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. மேலும் கடைகளுக்கு முழு அளவில் உணவு பொருட்களை ‘சப்ளை’ செய்ய வாணிப கழகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.