தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஏராளமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மருத்துவ காப்பீடு திட்டம்
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு கால அளவிற்கு சில சிறப்பம்சங்களுடன் நீட்டிக்கப்பட்டது. புதிய மருத்துவ காப்பீடு திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான தொகையில் 5 லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (மே 27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 4 வருடங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் தற்போது இந்தத் திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை ஆகும்.மேலும் காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திரத் தொகையானது ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களிடம் இருந்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதியுதவியின் அளவு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படுகிறது.
- புற்றுநோய், கணையம் உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
- கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ உதவித் தொகை கிடைக்கும்.
- ஓய்வூதியதாரா்களைச் சார்ந்து இருக்கும் நபா்களும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்குள் வருவா்.
- புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் தொடா்ந்து புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில் பரிந்துரைக் குழுவின் அடிப்படையில் கூடுதல் மருத்துவமனைகள் சேர்க்கப்படும்.