தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அரசின் சார்பில் விதிமுறைகள் கூறப்பட்டு உள்ளது. அதை கீழே முழுமையாக பார்ப்போம். இதனால் மாணவர்கள் இந்த விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேர்வுக்கு செல்ல தயாராகி கொள்ளவும்.

10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. அதன் காரணமாக மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தார்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வுகளும் ஆரம்பிக்க உள்ளது. அதனால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் என்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 10 முதல் மே 30 வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 11 வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31 தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. அடுத்தாக, பொதுத் தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் வைக்காமல் ஆல்பஸ் செய்யுமாறு அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு – 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்!

இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்னவென்றால்,

  • காலை 8 மணிக்கு – தேர்வு மையத்திற்கு காலை உணவு சாப்பிட்டு வர வேண்டும்
  • காலை 8.009.00 மணிக்கு – தேர்வுக்கு படித்த பாடங்களை திருப்புதல் செய்ய வேண்டும்.
  • காலை 9.009.45 மணிக்கு – திருப்புதல் முடித்து தேர்வுக்கு செல்ல தயாராகிக் கொள்ள வேண்டும்.
  • காலை 9.45 மணிக்கு – தேர்வுக்கு முதல் மணி அடிக்கப்படும். மாணவர்கள் தேர்வு அறைக்கு சென்று விடலாம்.
  • காலை 9.55 மணிக்கு – அதன் பின்னர் இரண்டாம் மணி அடிக்கப்படும். அதனை தொடர்ந்து அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளை மாணவர்களிடம் காட்டி முதலில் இருக்கும் இரு மாணவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.
  • காலை 10.00 மணிக்கு – மூன்றாவது மணி அடிக்கப்படும். மாணவர்களுக்கான வினாத்தாள்கள் அளிக்கப்படும்.
  • காலை 10.0010.10 மணிக்கு – மாணவர்கள் அமைதியாக வினா தாள்களை படித்து பார்க்க வேண்டும்.
  • காலை 10.00 மணிக்கு – நான்காம் மணிக்கு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும்.
  • காலை 10.0010.15 மணிக்கு – ஹால் டிக்கெட்களை சரிபார்த்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.
  • காலை 10.15 மணிக்கு – மாணவர்கள் தேர்வினை எழுத தொடங்கலாம்.
  • மதியம் 1.10 மணிக்கு – முதலில் எச்சரிக்கை மணி அடிக்கப்படும். அதனை தொடர்ந்து, மாணவர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெற்றால் அதை முதன்மை விடைத்தாளுடன் இணைக்க வேண்டும்.
  • மதியம் 1.15 மணிக்கு – கடைசியாக நீடித்த மணி ஒன்று அடிக்கப் படும். அதன் பின்னர் அறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களின் விடைத்தாள்களை வாங்க வேண்டும்.

இவ்வாறு தேர்வு துறையின் சார்பாக மாணவர்களுக்கும், அறை கண்காணிப்பாளர்கள் சார்பில் விதிமுறைகள் கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!