தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு அதிரடி!
நிலத்தடி நீரை பயன்படுத்தும் பொது மக்கள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் பதிவு செய்து ரூ.10000 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
நிலத்தடி நீர்:
பெரும்பாலான பொதுமக்கள் நிலத்தடி நீரை சட்டத்திற்கு புறம்பாக தான் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு முறையாக மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், யாருமே இந்த முறையை பின்பற்றாமல் சட்டத்திற்கு புறம்பாக தான் நிலத்தடி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டுமென்றால் மத்திய அரசிடம் பதிவு செய்யும்படி மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
முடிவுக்கு வரும் ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் ஷாக்!
இதனிடையே மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான அனுமதியை வாங்காமல் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தினால் நிலத்தடி நீரை எடுப்பதற்கான பதிவு கட்டணமாக ரூபாய் 10,000 செலுத்தி தகுந்த அனுமதி வாங்கிய பிறகு தான் நிலத்தடி நீரை எடுக்க வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் தமிழக மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா என அச்சமடைந்தனர். இந்நிலையில், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட தகவல் தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழ்நாடு அரசின் நீர் வளத்துறை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்க தேவையான ஆணையங்கள் இல்லாத நிலையில் தான் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அத்தகைய அறிவிப்பினை வெளியிட்டது. இதனால், தமிழக மக்கள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பால் அச்சப்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்துமே தமிழக அரசால் மட்டுமே கையாளப்பட்டு வருகிறது. இதனால், மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்துக்கு பொருந்தாது என நீர் வளத்துறை அறிவித்துள்ளது.