தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு எச்சரிக்கை!
தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்னை கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளியில் வைத்து தனியார் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
ஆசிரியர்கள் கவனத்திற்கு
தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவி தொகைகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்னை கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளியில் வைத்து தனியார் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
Vijay TV Bigg Boss 5 Promo | ராஜு & ப்ரியங்காவுக்கு இடையே தடித்த வாக்குவாதம் – அடுத்த கலவரம்?
இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, பாலியல் வன்முறைகள் குறித்து பள்ளி மாணவிகள் தைரியமாக முன் வந்து புகார் கொடுக்க வேண்டும். ஏனெனில் தற்போது அதிக இடங்களில் ஏராளமான பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக மாணவிகளுக்கு எப்படி ஆசிரியர்கள் மீது மோதலை கையாள வேண்டும் என்று கற்பிக்க வேண்டும். மேலும் குற்றச்சாட்டு ஏற்படும் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
‘செம்பருத்தி’ ஷபானா & ‘சத்யா’ ஆயிஷா இருவரின் ஃபெர்பாமன்ஸ் வீடியோ- குவியும் லைக்குகள்!
இதனை தொடர்ந்து பேருந்துகளில் படிகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்தும் விதமாக அதிக பேருந்துகளை பள்ளி நாட்களில் இயக்க போக்குவரத்து துறையிடம் ஆலோசனை நடத்தபட வேண்டும். அத்துடன் புதிய கல்வி கொள்கைகளில் நன்மைகளை மட்டும் எடுத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் மிக கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கல்வி அமைச்சர் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கூடுதல் அறிவுரைகளை வழங்கினார்.