தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு!

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணங்களை விரைவில் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு:

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர்கள் சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல், 7 ஆவது ஊதியக் குழுவின் படி பரிந்துரைப்படி 2016 முதல் 21 மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை வழங்குவதை நிறுத்தி விட்டு, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தைத் மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி 9 நாட்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப் பட்டது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுமுறை தினங்களில் பொருட்கள் அனுப்ப தடை!

ஆனால் கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வைத்து வருகின்றனர். மேலும் இதற்கு தமிழகத்தில் உள்ள பல கட்சி தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – அரசு உத்தரவு!

இந்நிலையில் தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணங்களை விரைவில் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். மேற்காணும் விவரங்கள், கோவை, மதுரை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருப்பத்தூர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் இன்னும் வரவில்லை. மேலும் இனியும் காலம் தாழ்த்தாமல் அரசுக்கு விரைவாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!