தமிழ்நாட்டு வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் உறுதி!
தமிழக அரசு, வணிகர்கள் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுதும் வணிகம் செய்ய வேண்டும் என மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர் தெரிவித்துள்ளார்
வணிகர்களுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள வணிகர்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தப்பட்டது. அதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, விக்கிரமராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுகளில் இருந்து தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து வணிகர்கள் முறையாக வரி செலுத்தினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என தெரிவித்த அவர் வணிகர் வரி செலுத்தினால் அவர்களுக்கு தமிழக அரசு எப்போதும் துணையாக இருக்கும். மேலும் தமிழக அரசின் வருவாயில் 85 சதவீதம் வருவாய் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி மூலமாக கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு – ரூ.4 லட்சம் வரை இழப்பீடு!
தொடர்ந்து பேசிய அவர், வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். வடமாநில வணிகர்களை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த தமிழக வணிகர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு விதித்த ஜி.எஸ்.டி வரியை வாபஸ் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் ஜி.எஸ்.டி வரி ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.