தமிழக பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கள்ளக்குறிச்சி சம்பவ எதிரொலி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறை:
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிகுலேஷன் என்னும் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியது. இந்த நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பல்வேறு மாணவர் அமைப்பினரும், மாணவியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டமானது ஒரு சில நாட்களில் கலவரமாக மாறியது. இதனையடுத்து காவல்துறையின் இடைவிடாத முயற்சியால் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த கலவரத்தின் எதிரொலியாக அனைத்து அரசு பள்ளிகளிலும் 9,10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு 5 நாட்களுக்கு முன் கவுன்சிலிங் வழங்கும் திட்டம் முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தவறான முடிவுகள் எடுப்பது குறையும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதிக் கொள்ளுதல், பாலியல் வன்முறை, சத்துணவு குறித்த புகார்கள், சாலை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்றால் உடனே அவரவர் சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஆக.6ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு வெளியீடு!
பள்ளிகள் சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சில அறிவுரைகளை தெரிவித்துள்ளார். அவை, குடிநீர்,கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் காலியிடம் குறித்த தகவல்களை சிஇஓ அனுமதியின்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க கூடாது. பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் முன் சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்தக் கூடாது என்றும் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு தரமானதாகவும், சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் வகுப்பறையில் போன் பேசக்கூடாது என்றும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்காக மாணவர்களை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுவும் வழக்கமான சம்பிரதாயம்தான் என்னவா இருந்தாலும் கவுன்சிலிங் மாணாக்கர்களுக்குதானா வேற யாருக்கும் தேவைப்படாதா