தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசின் சூப்பர் உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு நம்பகரமானோர் மூலம் பொருட்களை பெறலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் மாநில அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இது மட்டுமில்லாது கடந்த வருட ஊரடங்கின் போது தமிழக ரேஷன் கடைகளில் திமுக அரசு சார்பாக ரூ. 4000 நிவாரணத் தொகை மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வேகமெடுக்கும் ஒமைக்ரான் BA.2 வைரஸ்!
இந்த பயோமெட்ரிக் முறையில் பல நேரங்களில் விரல் கைரேகை பதிவாகுவது இல்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் கைரேகை பதிவாகுவதில்லை. இதனால் பொருட்கள் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இது போன்ற நேரங்களில் உரிய பதிவேடுகளில் பதிவு செய்து விட்டு பொருட்களை வழங்க உணவு வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை பெறுவதில் சில சிக்கல்களை சந்திக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய தகவல்!
அதனால் தங்களுக்கு நம்பகமான ஒருவரை நியாய விலைக் கடைக்கு அனுப்பி தங்களுக்கான பொருள்களை பெற்றுச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற ரேஷன் கடைகளில் விண்ணப்பப் படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து விற்பனையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்த படிவங்கள் நியாய விலைக் கடைகளில் பெறுவதற்கான சிறப்பு முகாம் 23.03.2022 அன்று அனைத்து கடைகளிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.