தமிழக போலீசாருக்கு ஒரு நற்செய்தி – காவல்துறையில் புதிய பதவி? விபரங்கள் சேகரிப்பு!
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர்களின் பெயர் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை:
நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதேபோல் காவல்துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் பணியாற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்களின் விவர பட்டியல் தயாரிக்கப்பட்டு டி.ஜி.பி., அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் போலீசில் புதிய பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 18,833 பேருக்கு கொரோனா தொற்று – 278 பேர் உயிரிழப்பு!
காவல் துறையில் 8 மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் போலீசில் சேர்ந்து, 35 முதல் 40 ஆண்டுகள் வரை ஏட்டாக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்று வந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மாற்றி சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு கொடுத்து குறிப்பிடத்தக்கது. ஏட்டாக சேர்ந்த, 15 ஆண்டுகளில் தலைமை காவலர் மற்றும் 25 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டது.
தேர்தல் வாக்குறுதி பல வழங்கப்பட்ட நிலையில், 35 ஆண்டு பணி செய்பவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவி கொடுக்க, அரசு ஆலோசனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. எனவே அக்., 2022 வரை, 35 ஆண்டு பணிக்காலம் முழுமை செய்தவர்களின் பட்டியலை அனுப்ப மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு எஸ்.ஐ.,க்களின் விபர பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
ஒவ்வொரு மாவட்டத்திலும், 35 ஆண்டு சர்வீசில் சுமார் 60 பேருக்கு குறையாமல் இருக்கிறார்கள். அந்த வகையில் மாநிலம் முழுவதும், 2,000 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கலாம் என்றும், இல்லை என்றால் அதற்கு ஏற்ப பண பலனாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்கலாம் என்றும் டி.ஜி.பி., அலுவலகத்தில் ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது என போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.