தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு – உதவித்தொகைக்கு 15,000 பேர் விண்ணப்பம்!
தமிழகத்தில் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேர சுமார் 15,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளி :
தமிழக அரசு பள்ளியில் பயில கூடிய மாணவர்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது நிதியமைச்சர் 6 – 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.
Exams Daily Mobile App Download
இந்த உதவித்தொகை அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகளுக்கு உதவியாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் உயர் கல்விக்கான ஊக்க தொகை பெறும் மாணவர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி – முக்கிய தகவல் வெளியீடு!
முதல் நாளான இன்று நடைபெற்ற முகாம் மூலம் 15,000 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த முகாமானது ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது மாணவிகள் வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண் ,10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தகுதியுள்ள மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.