தமிழக பேக்கரி, மளிகை கடை உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அதிகாரி வெளியீடு!!
தமிழகத்தில் காலாவதியான உணவு பொருட்களை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்கள் விற்பனை:
கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வது தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி வி.செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பேக்கரிகள் போன்ற உணவு விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (ஜூன் 7) முதல் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மளிகை கடைகளில் ஊரடங்கு காலத்தில் வாங்கிய பொருட்கள் காலாவதியானதாக இருந்தால் அவற்றை கடைகளில் இருந்து நீக்க வேண்டும். மேலும் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு காலாவதியான பொருட்களை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இ-பதிவு காரணங்களில் திருமணம் மீண்டும் நீக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!!
அதே போல கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்து வைத்துள்ள பிஸ்கெட்டுகள், கேக், எண்ணை பலகாரங்கள் ஆகியவை கெட்டுப்போயிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அது போன்ற உணவுகளை விற்பனை செய்ய வேண்டாம். மீறினால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.