தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மதிப்பெண்கள் பற்றிய விவரம்!

0
தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - மதிப்பெண்கள் பற்றிய விவரம்!
தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - மதிப்பெண்கள் பற்றிய விவரம்!
தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மதிப்பெண்கள் பற்றிய விவரம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளததை அடுத்து கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருணை மதிப்பெண்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நேரத்திலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக தினசரி வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்பட்டு படியாக பள்ளிகள் மீண்டும் திறக்க ஆரம்பித்தது. வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

முதல் கட்டமாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வகுப்பு வாரியாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. மாணவர்களின் பாடசுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 5ம் தேதி 12ம் வகுப்பிற்கும் 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதியும் தேர்வு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அந்தப் பாடத்துக்கு மட்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஜூன் 13ம் தேதி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது. இது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் . இத்திட்டம் அமலுக்கு வந்த பின் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும். என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட ஒரு மாதத்தில் சீருடை, பாட புத்தகங்கள் உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!