1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 முதல் கோடை விடுமுறை!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வரும் நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 6ம் தேதி முதல் 11 நாட்கள் கோடை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அடுத்தடுத்து மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திப்பதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு !
இதற்கிடையில் அரசின் நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. எனவே மாணவர்களும் பல மாதங்களுக்கு பின்னர் மிகுந்த உற்சாகத்துடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கினர். மத்திய அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ளுமாறு மாநில அரசுகளை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
BECIL நிறுவனத்தில் ரூ.53,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒடிஷா மாநில அரசு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஜூன் 6 முதல் 16 வரை 11 நாட்களாக குறைத்துள்ளது. இருப்பினும் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாதத்திற்கு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் காலை வகுப்புகளை பொருட்படுத்தாமல் மதியம் பள்ளிகளில் இருந்து குழந்தைகள் திரும்புவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.