தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

2
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்கள் எவ்வாறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கொரோனா பரவலின் எதிரொலியாக பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தன. அந்த வகையில் தமிழகத்திலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமுடக்கம், ஊரடங்கு போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டன. தொற்றினை கட்டுப்படுத்தும் செயலில் தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதனால் தொற்றானது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கியது. இப்படியாக இருப்பினும், பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் மட்டும் செயல்படாமல் இருந்தது.

தமிழகத்தில் ஜூலை 27ல் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படுகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன் பெரும் வகையில் பலன் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் செயல்திறனை அதிகரிக்க வழிவகை செய்தி வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறை சார்பாக உலக திறனாய்வு உடன் திறன் தெரிவுப்போட்டிகள் நடைபெற்றது. மேலும் இந்த போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Exams Daily Mobile App Download

மேலும் நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு போன்ற துறைகளில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார். குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளும் போது தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலம் ஏற்படும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதன் காரணமாக படிப்பிலும் நல்ல கவனம் செலுத்த முடியும் என்று கூறினார். உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலி மூலம் மாணவர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்வதோடு விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிகல்விதுறையே ஏற்கும் என்றும் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. இடைநிலை ஆசிரியர்கள் சம்பள வித்தியாசம் சரி செய்யப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!