அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – அரசு அளித்த முக்கிய விளக்கம்!

0
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு - அரசு அளித்த முக்கிய விளக்கம்!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு - அரசு அளித்த முக்கிய விளக்கம்!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – அரசு அளித்த முக்கிய விளக்கம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் குடும்ப ரேஷன் கார்டுதார்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தகுதியற்றவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்து உலவி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில உணவு ஆணையர் சவுரவ் பாபு விளக்கம் அளித்துள்ளதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ரேஷன் கார்டுகள்:

இந்தியாவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அரசு திட்டத்தின் கீழ் வீடு, மின் இணைப்பு, ஒரு ஆயுத உரிமம் வைத்திருப்பவர், மோட்டார் சைக்கிள் உரிமையாளர், பறவைகள் / பசு வளர்ப்பு உள்ளிட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் பெற தகுதியற்றவர்கள் என்ற தவறான செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி கொண்டிருக்கிறது.

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கனமழையின் காரணமாக விரைவு சேவைகள் ரத்து!

அத்துடன் தகுதியற்ற நபர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது குறித்து அம்மாநில அரசு கூறியதாவது, இதுவரை 2013ம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் அத்துடன் தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்கள் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக எந்தவொரு பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில உணவு ஆணையர் சவுரவ் பாபு சில விளக்கங்களை அளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இவர் கூறியதாவது, ரேஷன் கார்டு தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்தவொரு அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்றும் ரேஷன் கார்டுக்கு புதிய தகுதிக்கான நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் உறுதியளித்துள்ளார். அத்துடன் ரேஷன் கார்டுகளுக்கான தகுதி மற்றும் தகுதியின்மை 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதான் இதுவரை நடைமுறையில் இருப்பதாகவும் இதில் எந்த மாற்றமும் தற்போது செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் மாநிலத்தில் அனைவருக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!