அரசு ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு – புதுச்சேரி கவர்னர் அனுப்பிய சுற்றறிக்கை!!
புதுவையில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இது குறித்த அவர் அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார்.
கதர் ஆடை:
வளர்ந்து வரும் நாகரீக உலகில் நாம் பாரம்பரியத்தை வெகுவாக மறந்து வருகிறோம். தினந்தோறும் நாம் உண்ணும் உணவு மற்றும் உடை பயன்படுத்தும் பிற வகையான பொருட்கள் என அனைத்து முழுவதுமாக மாறிவிட்டது. இந்த நிலையில் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வண்ணம் புதுவையில் அரசு ஊழியர்கள் கதர் ஆடையை அணிய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
ஜன 30 & 31 தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம் – வாடிக்கையாளர்களை எச்சரித்த எஸ்பிஐ!
இது குறித்து அவர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் புதுவையில் மாதத்தின் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் அனைத்து அரசு ஊழியர்களும் கதர் ஆடைகளை அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மக்களிடம் இருந்து மனுக்களை பெற வேண்டும். அந்த மனுவில் உள்ள குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த மனுக்களுக்கு என்று தனியாக கோப்புகளை தயார் செய்ய வேண்டும் . அத்துடன் மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.