மத்திய அரசின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களா? உங்களுக்கான அறிவிப்பு!
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமான பிரதமரின் கிசான் பென்ஷன் திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் விரிவான பலன்களை பற்றி இப்பதிவில் காண்போம்.
PM கிசான் பென்ஷன் திட்டம்:
மத்திய அரசானது விவசாயிகளின் நலனுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக பிரதான் மந்திரி சம்மன் நிதி அதாவது கிசான் பென்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000 ரூபாய் விவசாயிகளின் நலனுக்காக வழங்கி வருகிறது. இந்த நிலையில் கிசான் பென்ஷன் திட்டத்தின் மூலம் 12வது உதவி தொகையைப் பெறும் விவசாயிகளின் நலன்களுக்காக ekyc பதிவிற்காக காலக்கெடுவை மீண்டும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் FD திட்டத்தில் கூடுதல் வட்டி – பயனாளிகள் மகிழ்ச்சி!
பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் ,கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு முதலீடு திட்டமாகவும். இந்த திட்டத்தின் கீழ் 18-40 வயதுடைய விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 3000 வரையிலான பென்ஷன் தொகை 60 வயதிற்கு பின் பெற முடியும். ஆனால் இந்த பென்ஷன் தொகையை பெற பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கடந்த மே 31 ஆம் தேதி 10 கோடி விவசாயிகளுக்கு சுமார் 21,000 கோடி வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். மேலும் இந்த திட்டத்தின் நலன்கள் சரியாக விவசாயிகளை சென்றடைகிறதா என்று கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுகிறது. இதன்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது eKYc யை அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக, தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, முகவரி சரிப்பார்ப்பு, விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடுவை மீண்டும் ஆகஸ்ட் 31, 2022 வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்