பான், ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – அபராதத் தொகை ரூ.1,000 ரூபாயாக அதிகரிப்பு..!!
நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கி சேவைகளை செய்ய தங்களது ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் பல முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பான் ஆதார் இணைப்பு:
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கிகளில் சேவைகளை செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால் சென்ற மார்ச் மாதத்திற்குள் ஆதார் கார்டை இணைக்காமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதியுடன் அபராதம் 1000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் விரைந்து பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைப்பது எப்படி?
- முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
- அதில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் பான் எண், ஆதார் எண், பெயர் பதிவு செய்ய வேண்டும்.
- ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் இருந்தால் அதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்து அது சரியா என சோதனை செய்து இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.
- அதன் பின் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்து இணைக்க கொடுத்த விவரம் சரியா என பார்த்து கொள்ளலாம்.
- www.pan.utiitsl.com/
panaadhaarlink/forms/pan.html/ panaadhaar இந்த இணையதளத்தில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், உங்களது ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டதா என தெரிந்து கொள்ளலாம்.