தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதனால் கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் மாற்றம், கூடுதல் தானியங்கள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழக அரசின் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரிசி இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா வருகைக்கு பின்னர் சாமானிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலன்களை அடைந்து வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் பல மோசடிகள் நடித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ரேஷன் கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தொடர்ந்து ரேஷன் கடைகள் குறித்த புதிய விதிமுறைகளும் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் ரேஷன் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – போட்டோவை அப்டேட் செய்வது எப்படி?

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் ஆய்வு பணி நடந்தது. பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சக்கரபாணி, தமிழகம் முழுவதும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3000 ரேஷன் கடைகளை 2 ஆக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 68 பகுதி நேர புதிய ரேஷன் கடைகள் வரும் ஜூலை மாதத்துக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 7 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!