மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15ம் தேதி வரை நீட்டிப்பு!!
நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டவது அலையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகைப்பதிவு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு:
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் உயிர்கொல்லி நோய் மக்களை பெரிதும் துன்புறுத்தி வருகிறது. தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கின் பொழுது சில அத்தியாவசிய அரசு பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அவை அனைத்தும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி இயங்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் மத்திய அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு வருகை பதிவேட்டில் தளர்வுகள் அறிவித்தது. தற்போது இது குறித்து ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தி வருவதை கருத்தில் கொண்டு வருகைப்பதிவு முறை தள்றவுகள் ஜூன் 15 வரை மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தான் சம்பளம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
வருகைப்பதிவு கட்டுப்பாடு தளர்வுகள்:
- மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும்.
- அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் வெவ்வேறு நேரங்களில் ஊழியர்கள் வர வேண்டும்.
- அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் செயல்பாட்டு தேவையை கருத்தில் கொண்டு, பணியாளர்களின் வருகையை அனைத்து மட்டங்களிலும் அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்.
- அலுவலகம் வரும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட உரிய கொரோனா நடத்தை முறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் தொலைபேசி மற்றும் இதர மின்னணு தொடர்பு முறையின் மூலம் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Hello sir super message.
Yes sir, there should be some in any way
To give covid-19 vaccine compulsary to
Eradicate corona virous