வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உதவி செய்து வருகிறது. அது குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலை:
தற்போது வெளிநாட்டு வேலை குறித்த மோகம் அதிகமாகியுள்ளது. 1978ல் தொடங்கப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. இதுவரை 10,350க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சவுதி அரேபியா, ஓமன், துபை மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவர், பொறியாளர், செவிலியர், பாராமெடிக்கல் – டெக்னீஷியன், திறன் சார்ந்த மற்றும் திறன் அல்லாத பணிகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபின் புதிய முதல்வர் இன்று பதவியேற்றார் – பிரதமர் வாழ்த்து!
தற்போது நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதால் அயல்நாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பை பெற முடியும். இந்த நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த நிறுவனம் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் பதிவு செய்யும் முறை பற்றிய விளக்கங்களை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் விரைவில் திறப்பு? தயாராகும் புதிய கட்டுப்பாட்டு விதிகள்!
இது குறித்து மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 04366-224226 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அயல்நாடுகளில் வேலை தேடும் இளைஞர்கள் ஆன்லைனில் பதிவு செய்து இந்த நிறுவனம் மூலம் பயன்பெறலாம் என கூறப்படுகிறது.