தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவ பாடத்திட்டம் வெளியீடு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதல் பருவ பாடத்திட்டம்:
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. மேலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டது. அதன் படி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் கோடைவிடுமுறை விடப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று முதல் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான முதல் பருவ பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே வெளியிட்டுள்ளது. அதனால் வழக்கம் போல இந்த ஆண்டு பள்ளிகளில் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2 ஆண்டுகளுக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.