தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு பிறகு பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு வகுப்பு மற்றும் பாடவாரியாக கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே மாத தொடக்கத்தில் தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 5ம் தேதி தேர்வு தொடங்கியது. இத்தேர்வானது இன்றுடன் முடிவடைய உள்ளது. நாளை முதல் (மே 14) கோடை விடுமுறை தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். 1 மாத கால இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும். இந்த விடுமுறை காலத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவிட விரும்புவர். மொழி வகுப்புகளில் சேருதல், தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுதல் போன்றவைகளை செய்வர்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
நடப்பாண்டு கோடை விடுமுறை வரவுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாணவர்கள் கோடை விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் காணும் விடுமுறையாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.