தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் வேலை நேரம் மாற்ற கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
வேலை நேர மாற்றம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தபடி தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் பள்ளிகளுக்கு வருகை தருவது கண்டறியப்பட்டது. அதனால் இதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பற்றி விரிவாக பார்ப்போம்.
பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
தமிழக முதல்வர் தனது அறிவிப்பில், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் செயல்படுத்த உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பள்ளிகளில் மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக பள்ளி வேலை நேரம் மாற்ற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு ஜூன் 13ம் தேதி அன்று தொடங்கப்படும் போது இந்த வேலை நேர மாற்றம் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.