தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறை!
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்படும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு எப்போதும் போல் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். மேலும் நேரடி முறையில் தேர்வெழுத வாய்ப்பில்லாத காரணத்தால் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இரண்டு வருடமாக பள்ளிகளுக்கு அதிகமான விடுமுறைகள் விடப்பட்டதால் மாணவர்களுக்கு இந்த விடுமுறைகளை சரி செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
கோடை வெயிலுக்கு முன்னரே மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பாதி நாட்களிலே முழு ஆண்டு தேர்வு நடத்தி மே மாதத்தில் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்த வருடம் கோடை காலம் ஆரம்பித்து கோடை விடுமுறை விடாமல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த சோர்வுடன் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமைகளில் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பரிசீலனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் வருகிற ஏப்.29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த மாதம் ஏற்கனவே நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். இருப்பினும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலை பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற உள்ளதால் விடுமுறை என தொடக்க கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதேபோல் மேல்நிலை, உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் இன்று எப்போதும் போல் பள்ளிகள் செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.