தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறையின் சூப்பர் திட்டம்!
தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல் கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
காலை சிற்றுண்டி:
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற தொடங்கியது. இந்த நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் நடைபெற தொடங்கியது.
இதனையடுத்து கால அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி தேர்வுகள் நடைபெற்றது. தற்போது 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்து 1 மாத காலம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 14ம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மே 31 தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் கட்டமாக சில மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். டைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளதால் ஜூன் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.