1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காலை 7 மணிமுதல் 12 மணிவரை பள்ளிகள் திறப்பு!
ஹரியானா மாநிலத்தில் தற்போது நிலவும் வெப்ப அலைக்கு மத்தியில் இன்று (மே.4) முதல் பள்ளி நேரத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி தினசரி காலை 7 மணிமுதல் 12 மணிவரை வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் துவங்கும் கோடை வெப்பம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே துவங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தோறும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் தற்போது நிலவும் வெப்ப அலைக்கு மத்தியில் இன்று (மே.4) முதல் பள்ளி நேரத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் நிலவும் கடும் வெயிலின் காரணமாக, மே 4ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் தினந்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பள்ளிகள் செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முகக்கவசம் கட்டாயமில்லை!
இதற்கு முன்னதாக ஹரியானாவில் நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மாற்றி அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக, ஹரியானாவில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41-45 டிகிரி செல்சியஸ் வரம்பில் உள்ளது. இந்த வெப்பம் அடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்பதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.