தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பெண் சான்றிதழ்!!
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020-21ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கடந்த 2019-20ம் கல்வி ஆண்டில் கொரோனா நோய்பரவல் காரணமாக 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் 2020-21ம் கல்வியாண்டில் பள்ளி வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. மேலும் கடந்த ஆண்டை போல் தற்போது 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
ஜூலை 25 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – முதன்மை செயலர் உத்தரவு!
இதனால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்று தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் உயர் கல்வி வகுப்புகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் முக்கியம் என்பதால் இதுகுறித்து தனி குழு அமைக்கப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் குறித்து தற்போது வரை முறையான அறிவிப்பு வெளிவராத காரணத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டத்தை வகுத்து உள்ளதாக தெரிகிறது. அதன்படி மாணவர்களுக்கு பாடவாரியாக மதிப்பெண்கள் இன்றி ‘தேர்ச்சி’ என்று மட்டும் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழை வழங்க திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.